யாழில் தவறான முடிவால் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி

யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் 19 வயது யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். குறித்த யுவதி வீட்டில் யாரும் இல்லாத வேளை இன்று பிற்பகல் தனது வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். பொலிஸார் விசாரணை இந்த மாணவி இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவி எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரது சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.